கருக்கு / karukku
“என் கதை. உன் கதை, உங்கள் கதை” என்னும் பாணியிலே தன் பிறப்பு. வளர்ப்பு, வாழ்ந்த விதம் இவை பற்றிக் கூறுவதன்வழி தனது தலித் இனத்தின் வரலாற்றையே படம் பிடித்துக் காட்டுகிறார் இந்நூல் ஆசிரியர்.
சமுதாயமும் சமயமும் சாதிவெறி வளர்த்து சொல்லொண்ணாக் கொடுமைகளைச் சாதித்து வந்தது உண்மையென்றாலும், அதன் மத்தியிலும் உயிரோட்டத்தோடு, தன்மான உணர்வோடு, இன எழுச்சியோடு தலைநிமிர்ந்து நின்று எதிர் நீச்சல் போடுவோம் என்ற உள்ளத்து உறுதி இந்நூலின் ஒவ்வொரு ஏட்டிலும் குதித்தெழுகின்றது.
தலித் மக்களுக்கு தமிழகக் கத்தோலிக்க திருச்சபையிலே இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைக் கண்டு குமுறும் நாம் அவற்றின்
வரலாற்றுப் பின்னணியை சிறிது அறிவதற்கும் இந்நூல் துணை நிற்கும்.
மி.ஜெயராஜ், சே.ச.
சமுதாய சிந்தனை செயல் ஆய்வு மையம்,
மதுரை.