எர்னஸ்டோ சே குவேரா
நீங்கள் நல்ல புரட்சிக்காரர்களாக வளர வேண்டும். கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டும். தொழில்நுட்ப ஞானம் பெற வேண்டும். இந்த அறிவு தான் இயற்கையை நமது கட்டுக்குள் கொண்டுவர நமக்கு உதவும். நாமெல்லாம் தனிப்பட்ட முறையில் முக்கியமற்றவர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
உலகில் எங்கு அநீதி நிலவினாலும் அதைக் கண்டு ஆழமாக வெறுப்புணர்வு கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியமானது. அதுதான் புரட்சிக்காரனின் முக்கியமான பாராட்டத்தக்க குணம். குழந்தைகளே, விடை கொடுங்கள். மீண்டும் உங்களை நான் காண்பேன் என நம்புகிறேன்.
தன் குழந்தைகளுக்கு ‘சே’ எழுதிய கடிதத்தில் உள்ள வரிகள்