S. V. Raja durai - New Century Book House https://ncbhpublisher.in Wed, 23 Oct 2024 09:54:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png S. V. Raja durai - New Century Book House https://ncbhpublisher.in 32 32 பார்வையிழத்தலும் பார்த்தலும் https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d/ Wed, 23 Oct 2024 09:54:46 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29410
  • Book Title : பார்வையிழத்தலும் பார்த்தலும்  (Paarvaiyizhathalum Parthalum)
  • Edition : 1
  • Category : Articles
  • ISBN : 9788123431222
  • Author : S. V. Rajadurai
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2016
  • Pages : 436
  • Code no : A3417
  • The post பார்வையிழத்தலும் பார்த்தலும் first appeared on New Century Book House.

    ]]>
    பார்வையிழத்தலும் பார்த்தலும்

    மிகக் கடினமான விஷயங்களைக்கூட எவ்விதப் பம்மாத்தும் இல்லாமல், அலங்காரங்களும் ஜோடனைகளும் நீங்கிய மொழியில் கூறும் எளிய நடை எஸ்.வி.ராஜதுரையின் தனிச் சிறப்பு. தாம் பார்க்கும், கேட்கும், பேசும், படிக்கும், இரசிக்கும் விஷயங்களைப் பற்றி ஆழமாக உணர்ந்து, கற்று, தமக்கான மார்க்ஸியப் பார்வையுடன் கருத்துகளை முன் வைப்பவர். வெறும் பேச்சு, எழுத்து என்றில்லாமல் களத்திலும் இயங்கியவர். நாவல், சிறுகதை, நாடகம், ஊடகம், சினிமா, வரலாறு, உளவியல், தத்துவம் என பல துறைகளில் கிளை விரிக்கும் இத் தொகுப்பிலுள்ள 44 கட்டுரைகளும் வாசகர்களுக்கு நல் விருந்து.

    The post பார்வையிழத்தலும் பார்த்தலும் first appeared on New Century Book House.

    ]]>
    இருண்ட காலங்களில் பாடுவதும் இருக்குமா? (கட்டுரைகள்) https://ncbhpublisher.in/product/%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4/ Fri, 18 Oct 2024 22:27:21 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26183
  • Category : Articles
  • Author : S.V. Raja Durai
  • ISBN : 9788123444444
  • Weight : 200.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2023
  • Pages : 428
  • Code no : A4798
  • The post இருண்ட காலங்களில் பாடுவதும் இருக்குமா? (கட்டுரைகள்) first appeared on New Century Book House.

    ]]>
    “இருண்ட காலங்களில் பாடுவதும் இருக்குமா?” என்ற கேள்வியை எழுப்பி, “ஆம். இருண்ட காலங்களைப் பற்றிப் பாடுவதும் இருக்கும்” என்று விடையளிப்பதுடன் தொடங்குகிறது ஜெர்மானியப் புரட்சிகரக் கவிஞர் பெர்டோல்ட் ஃப்ரெஹ்ட்டின் கவிதையொன்று. அந்தக் கவிதைக்கேற்ற வகையில்தான் இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கலை, இலக்கிய, அரசியல், வரலாற்றுக் கட்டுரைகள் அமைந்துள்ளன. ஃபெய்ஸ் ஃபெய்ஸ் அஹ்மத் கூறியதுபோல,
    பேசு, ஏனெனில் உன் உதடுகள் சுதந்திரமாக உள்ளன; பேசு, உனது நாக்கு இன்னும் உன்னுடையதாகவே இருக்கிறது
    உனது நிமிர்ந்த உடல் உன்னுடையதுதான் பேசு, உன் உயிர் இன்னும் உன்னுடையதுதான்.

    The post இருண்ட காலங்களில் பாடுவதும் இருக்குமா? (கட்டுரைகள்) first appeared on New Century Book House.

    ]]>
    இந்திய அரசமைப்பு அவையில் அண்ணல் பி.ஆர்.அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரை (நவம்பர் 25, 1949) https://ncbhpublisher.in/product/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:25:08 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25487 ISBN : 9788123444307
    Author : B.R. Ambedkar
    Translator : S. V. Raja durai
    Weight : 100.00 gm
    Binding : Paper Back
    Language : Tamil
    Publishing Year : 2023
    Pages : 24
    Code no : A4784

    The post இந்திய அரசமைப்பு அவையில் அண்ணல் பி.ஆர்.அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரை (நவம்பர் 25, 1949) first appeared on New Century Book House.

    ]]>
    இந்திய அரசமைப்பு அவையில் 1949 நவம்பர் 25 அன்று அண்ணல் பி.ஆர்.அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரையின் தமிழாக்கம் இந்தக் குறுநூலில் தரப்படுகிறது. பி.ஆர்.அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரை

    அந்த உரையில் எவை முக்கியமானவை, எவை சரியாகப் புரிந்துகொள்ளப்படக்கூடியவை, எவை அவரது எண்ணத்திற்கும் இலட்சியத்திற்கும் எதிராகப் பயன்படுத்தப்படக்கூடிய வாய்ப்பைத் தருபவை என்பதை தமிழ் வாசகர்களும், ஆய்வறிஞர்களும், சமூக, அரசியல் இயக்கக் களப்பணியாளர்களும், அவர்களது தலைவர்களும் தீர்மானித்துக் கொள்ளும் வகையில் அண்ணலின் உரையின் எந்தப் பகுதியும் இங்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை.

    The post இந்திய அரசமைப்பு அவையில் அண்ணல் பி.ஆர்.அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரை (நவம்பர் 25, 1949) first appeared on New Century Book House.

    ]]>
    எங்கெல்ஸ் 200 பங்களிப்புகளும் வரம்புகளும் / Engles 200 Pangalippugalum Varambugalum https://ncbhpublisher.in/product/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-200-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/ Fri, 18 Oct 2024 22:24:44 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25372 Category : Marxism
    ISBN : 9788123440316
    Author : Marcello Musto
    Translator : S. V. Raja durai
    Weight : 100.00 gm
    Binding : Paper Back
    Language : Tamil
    Publishing Year :
    Code no : A4384

    The post எங்கெல்ஸ் 200 பங்களிப்புகளும் வரம்புகளும் / Engles 200 Pangalippugalum Varambugalum first appeared on New Century Book House.

    ]]>
    வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின்படி. வரலாற்றில் இறுதியாகத் தீர்மானிக்கக்கூடியவை யதார்த்த வாழ்வை உற்பத்தி செய்தலும் மறுஉற்பத்தி செய்தலும் ஆகும். இதற்குமேல் மார்க்ஸோ நானோ எதையும் எப்போதும் கூறியதில்லை. எனவே. எங்கள் கூற்றை. பொருளாதாரக் காரணி மட்டுமே தீர்மானிக்கக்கூடிய ஒரே காரணி என நாங்கள் சொல்வதாக யாரேனும் திரித்துக் கூறுவாரேயானால். அவர் இந்தக் கருத்தோட்டத்தை அர்த்தமற்ற, அருவமான. அறிவுக்குப் பொருத்தமற்ற சொற்றொடராக மாற்றுகிறார். பொருளாதார நிலைமை என்பது அடித்தளம். ஆனால் மேல்கட்டுமானத்தின் பல்வேறு கூறுகள், வர்க்கப் போராட்டத்தின் அரசியல் வடிவங்கள், அதன் விளைவுகள் (எடுத்துக்காட்டாக, போர்க்களத்தில் வெற்றிபெற்று வந்த ஒரு வர்க்கம் உருவாக்குகிற அரசியல் சாசனங்கள் போன்றவை), நீதி முறைமைகள், இந்த யதார்த்தமான போராட்டங்கள். அவற்றில் பங்கேற்போரின் மூளையில் ஏற்படுத்தும் மறுவினைகள், அரசியல். நீதிபரிபாலன. தத்துவக் கோட்பாடுகள். சமயச் சிந்தனைகள், மீற முடியாத புனிதக் கோட்பாடுகளாக அவை அடையும் வளர்ச்சி ஆகியனவும் வரலாற்று முக்கியத்துவமுடைய போராட்டங்களில் தமது செல்வாக்கைச் செலுத்துகின்றன. பல சமயங்களில் அந்தப் போராட்டங்களின் வடிவத்தைத் தீர்மானிப்பதில் முதன்மைக் கூறாய் அமைகின்றன. (F.Engels to Joseph Bloch, 21[22] September 1890, Marx Engels Collected Works, Vol.49, Progress Publishers, Moscow, 2001, pp 33-35).

    The post எங்கெல்ஸ் 200 பங்களிப்புகளும் வரம்புகளும் / Engles 200 Pangalippugalum Varambugalum first appeared on New Century Book House.

    ]]>
    கார்ல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf/ Fri, 18 Oct 2024 22:24:22 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25237 ISBN : 9788123426112
    Author : S. V. Rajadurai
    Weight : 100.00 gm
    Binding : Paper Back
    Language : Tamil
    Publishing Year : 2014
    Code no : A2958

    The post கார்ல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை first appeared on New Century Book House.

    ]]>
    தமிழகத்தில் மட்டுமின்றி, அனைத்திந்திய அளவிலும் பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட் மூலதனத்துக்கும் இலாபத்துக்கும் சிறிதும் ஊறு விளையாதபடி பலவகையான பூச்சுவேலைகள் மூலம் அனைத்து சமூகக் கேடுகளையும் போக்குவதாகக் கூறிக்கொள்ளும் போலி சமூக மருத்துவர்களுக்குக் குறைவில்லை. ஆகவேதான் முன் எப்போதையும்விட மார்க்ஸும் எங்கெல்ஸும் நமக்கு இப்போது தேவைப்படுகின்றனர். நாம் எதிர்கொள்ளும்
    கேள்வி, வெளிகுலாப் புரட்சியாளர் ஹ்யூகோ சாவேஸ் கூறியதுபோல, “சோசலிசமா, மனிதகுலத்தின், இந்தப் புவிக் கோளத்தின் மரணமா?’ என்பதுதான். உலக முதலாளித்துவப் பொருளாதாரம், மனிதகுலம் அனைத்துக்குமான ஒரே வாழ்வாதாரமான சூழலியலையே அழித்துக் கொண்டிருக்கிறது. எனவே, நமது விடுதலைக்கு வேண்டியது வெறும் அரசியல் மாற்றமல்ல, மாறாக, ஒட்டுமொத்தமான சமுதாய மாற்றமே என்பதை 1848-ஆம் ஆண்டிலேயே உலகிற்கு அறிவித்த ஈடிணையற்ற அரசியல், தத்துவ, பொருளாதார, பண்பாட்டு ஆவணமே ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’. அந்த ‘அறிக்கை’யைப் படிப்பதால் மட்டுமே உலகத்தை மாற்றிவிட முடியாது; ஆனால், அதை வாசிப்பது உலகை மாற்றியே தீர வேண்டும் என்னும் எண்ணத்தை ஏற்படுத்தும்.

    ‘அறிக்கை’யின் தோற்றம், அது மேற்கொண்ட பயணங்கள், உலக மக்கள் மீது அது ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைப்பதுடன் பத்திக்குப் பத்தி விரிவான விளக்கங்களையும் வழங்கியுள்ளார் எஸ்.வி.ராஜதுரை. ‘அறிக்கை’க்கு மார்க்ஸும் எங்கெல்ஸும் எழுதிய எழு முன்னுரைகள், மாறிவரும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப ‘அறிக்கை’, ஏன் மீண்டும் மீண்டும் படிக்கப்பட வேண்டும், ‘மறு வாசிப்பு’க்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டிகளாக அமைகின்றன.

    The post கார்ல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை first appeared on New Century Book House.

    ]]>
    கல் தெப்பம் / Kal Theppam https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-kal-theppam/ Fri, 18 Oct 2024 22:24:22 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25238 ISBN : 9788123427676
    Author : S. V. Rajadurai
    Weight : 100.00 gm
    Binding : Paper Back
    Language : Tamil
    Publishing Year : 2014
    Code no : A3114

    The post கல் தெப்பம் / Kal Theppam first appeared on New Century Book House.

    ]]>
    செ குவெராவில் தொடங்கி செ குவெராவில் முடிகின்றது 18 கட்டுரைகளுள்ள இந்தத் தொகுப்பு. கலை, இலக்கியம், சாதியம், இந்துத்துவம், தமிழர் பண்பாடு, அனைத்துலக அரசியல், ஏகாதிபத்தியம், சர்வதேசியம், பெண்ணியம், சூழலியல் என விரிந்து பரவும் களங்களுக்கும் தளங்களுக்கும் வாசகர்களை அழைத்துச் செல்லும் எஸ்.வி.ராஜதுரையின் எழுத்துகள் எளிமையானவை; ஆழமானவை.

    இரசித்துப் படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்குமான சில தமிழக, மலேசிய, பாலஸ்தீன, கென்ய, போர்ச்சுக்கிசிய, ரஷ்ய, ஜெர்மானிய, இலத்தின் அமெரிக்கப் படைப்பிலக்கியங்களை அறிமுகப்படுத்தும் பல கட்டுரைகள்…

    The post கல் தெப்பம் / Kal Theppam first appeared on New Century Book House.

    ]]>
    முதலாளியமும் அதன் பிறகும் / Muthalaliyamum Athan Pirakum https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/ Fri, 18 Oct 2024 22:24:22 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25239
  • Category : Articles
  • Author : S. V. Rajadurai
  • ISBN : 9788123427294
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2014
  • Pages : 176
  • Code no : A3076
  • The post முதலாளியமும் அதன் பிறகும் / Muthalaliyamum Athan Pirakum first appeared on New Century Book House.

    ]]>
    மார்க்ஸியத்துக்கான அறிமுக நூல்கள் என்னும் வகையில் பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸன் எழுதிய இரண்டாவது நூலான இதில், மக்களின் தேவைகளுக்கான பொருள்கள் பண்ட மாற்று செய்யப்பட்டு வந்த காலத்திலிருந்து, வணிக நோக்கிற்காகப் பொருள்கள் சந்தைச் சரக்குகளாக மாற்றப் பட்டுப் பின்னர் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட முதலாளிய சரக்கு உற்பத்தி முறை தோன்றிய காலம் வரையிலான வரலாற்று விளக்கங்கள் தரப்படுவதுடன், உபரி உழைப்பு, உபரி மதிப்பு, இலாபம் முதலியன பற்றிய மார்க்ஸியப் பொருளாதாரக் கோட்பாடுகள் எளிமையாகவும் ஆழமாகவும் விளக்கப்படுகின்றன. முதலாளிய சமுதாயத்தின் உள்ளார்ந்த முரண்பாடு, தவிர்க்கவியலாதவாறு சோசலிசத்துக்கு வழிவிட்டாக வேன்டிய காரணிகளில் ஒன்றாக இருப்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது.

    காலஞ்சென்ற பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி, எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்றோர் பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸனிடம் கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    The post முதலாளியமும் அதன் பிறகும் / Muthalaliyamum Athan Pirakum first appeared on New Century Book House.

    ]]>
    தீவுச் சிறையில் விடுதலை இலக்கியம் / Theevu Siraiyil Viduthalai Ilakkiyam https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%af%81%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/ Fri, 18 Oct 2024 22:24:22 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25240 ISBN : 9789388050609
    Author : S. V. Rajadurai
    Weight : 100.00 gm
    Binding : Paper Back
    Language : Tamil
    Publishing Year : 2018
    Code no : A4015

    The post தீவுச் சிறையில் விடுதலை இலக்கியம் / Theevu Siraiyil Viduthalai Ilakkiyam first appeared on New Century Book House.

    ]]>
    எஸ்.வி.ராஜதுரை தமது கட்டுரைகளினூடாக இந்திய, அல்ஜீரிய, ஆங்கில, பிரெஞ்சு, இத்தாலிய. தென்னமெரிக்க கலை இலக்கியப் படைப்பாளிகளுடன் நம்மை உறவாட வைக்கிறார். இந்தோனீஷாவின் மாபெரும் இலக்கியப் படைப்பாளி ப்ரமோதியா ஆனந்த தூர் பற்றிய விரிவான அறிமுகம் தமிழ் வாசகர்களுக்கு முதன்முறையாகக் கிடைக்கச் செய்வதுடன், அவர் எழுதிய நான்கு நாவல்களின் 1200 பக்கங்கள்) சுருக்கத்தைச் சுவை குன்றாத வகையில் வழங்குகிறார். ஏறத்தாழ எண்பதாண்டுக் காலமாகப் பசுமையாக உள்ள திரைப்பட மொன்றை, அதன் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கிறார்.

    நம் காலத்தில் வாழ்ந்த தமிழக இந்திய இதழியல், இலக்கிய ஆளுமைகளின் பன்முகப் பரிமாணங்களை எடுத்துக் காட்டும் அவர் மதவாத, சாதிய, பாலின, வர்க்கப் பிரச்சினைகளை மார்க்ஸிய அம்பேத்கரிய பெரியாரிய வெளிச்சத்தில் ஆழமான பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறார். கலைஞர் மு.கருணாநிதி பற்றிய நினைவுக் குறிப்புகளில், தாம் பயணித்த அரசியல் பாதையை, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை எடுத்துரைக்கிறார். காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வைப் பெரியார் தமக்கே உரிய அசாதாரணமான மனிதநேய, சாதி எதிர்ப்புக் கண்ணோட்டத்திலிருந்து விளக்கியதைக் கோடிட்டுக் காட்டுகிறார்.

    The post தீவுச் சிறையில் விடுதலை இலக்கியம் / Theevu Siraiyil Viduthalai Ilakkiyam first appeared on New Century Book House.

    ]]>
    சொல்லில் நனையும் காலம் / Sollil Nanaiyum Kaalam https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-sollil-nanaiy/ Fri, 18 Oct 2024 22:24:22 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25241 ISBN : 9788123430461
    Author : S. V. Rajadurai
    Weight : 100.00 gm
    Binding : Paper Back
    Language : Tamil
    Publishing Year : 2015
    Code no : A3349

    The post சொல்லில் நனையும் காலம் / Sollil Nanaiyum Kaalam first appeared on New Century Book House.

    ]]>
    கலை இலக்கியப் படைப்புகளை அவற்றின் அழகியல், அரசியல், சமூகவியல், வரலாற்றுக் கூறுகளை மார்க்ஸியக் கண்ணோட்டத்தில் ஒன்றோடொன்று இணைத்துப் பார்க்கும் தனித்துவமான பார்வையைக் கொண்டவர் எஸ்.வி.ராஜதுரை. அவரது 22 கட்டுரைகளில் தமிழக, கன்னட, ஆப்பிரிக்க, பண்டைக் கிரேக்சு. மேற்கு ஐரோப்பிய, ரஷியக் கலை இலக்கியப் படைப்புகள் எளிய நடையிலும் இரசனையுணர்வோடும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மனித உரிமை, சூழலியல், சாதியம். பெண்ணியம் எனத் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன அவரது அக்கறைகளின் எல்லைகள்,

    The post சொல்லில் நனையும் காலம் / Sollil Nanaiyum Kaalam first appeared on New Century Book House.

    ]]>
    சார்த்தர் விடுதலையின் பாதைகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/ Fri, 18 Oct 2024 22:24:22 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25242 ISBN : 9788123427034
    Author : S. V. Rajadurai
    Weight : 100.00 gm
    Binding : Paper Back
    Language : Tamil
    Publishing Year : 2014
    Code no : A3050
    Page: 224

    The post சார்த்தர் விடுதலையின் பாதைகள் first appeared on New Century Book House.

    ]]>
    சார்த்தரின் நூறாண்டு நிறைவின் போது, கியூபக் கம்யூனிஸ்ட் கட்சி ஏடான ‘கிராண்மா’ எழுதியது: “மார்க்ஸ் திட்டமிட்ட சோசலிசத்தை, அதன் தூய்மையான வடிவத்தில் சார்த்தர் எடுத்துக் கொண்டார். அந்த சோசலிசம் மே 1958 போராட்டத்தின் தோல்வியாலும் சோவியத்தின் வீழ்ச்சியாலும் அழிந்துவிடவில்லை. இந்தத் தனிநபர்களும் அந்தக் கனவுகளும் கடந்த காலத்துக்கல்ல, எதிர்காலத்துக்குரியவை.”

    மாபெரும் சிந்தளையாளராக. படைப்பிலக்கியவாதியாக, நாடகாசிரியராக. ஏகாதிபத்திய-எதிர்ப்புப் போராளியாக, காலனி நாட்டு விடுதலைப் போராட்டங்களின் ஆதரவாளராக, 1958ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் ஆதர்சங்களிலொருவராகத் திகழ்ந்த ழான் பால் சார்த்தரின் வாழ்க்கைப் பயணத்தின் ஊடாக, இருபதாம் நூற்றாண்டின் முக்கிய வரலாற்று நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த நூல், அவற்றைப் பின்னணியாகக் கொண்டு. அவரது தத்துவம், இலக்கியப் படைப்புகள், அரசியல், சமூகச் செயல்பாடுகள் ஆகியன தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்றன.

    The post சார்த்தர் விடுதலையின் பாதைகள் first appeared on New Century Book House.

    ]]>