Tiruchi Siva - New Century Book House https://ncbhpublisher.in Wed, 23 Oct 2024 09:55:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Tiruchi Siva - New Century Book House https://ncbhpublisher.in 32 32 எதிர்பாராத திருப்பம்! https://ncbhpublisher.in/product/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/ Wed, 23 Oct 2024 09:55:19 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29516
  • Book Title : எதிர்பாராத திருப்பம்!   (Ethirpaaratha thiruppam!)
  • Edition : 1
  • Category : Essay
  • ISBN : 9788198050236
  • Author : Tiruchi Siva M.P.
  • Weight : 300gm
  • Binding : Hard Bound
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 142
  • Code no : A5184
  • The post எதிர்பாராத திருப்பம்! first appeared on New Century Book House.

    ]]>
    எதிர்பாராத திருப்பம்!

    நெருக்கடி நிலைக்காலத்தில், தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்பட்ட நொடியில். மிசா சட்டத்தின்கீழ் கழகத்தினர் பலரும் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டனர். மூத்த நிர்வாகிகள் முதல் இளைஞர்கள் வரை எல்லா வயதினரையும் தேடித் தேடி கைது செய்தது காவல்துறை. கல்லூரி மாணவராக இருந்த சிவாவும் போலீசாரால் தேடிக் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் கழகத்தின் மூத்த நிர்வாகிகளுடன் அடைக்கப்பட்டார். ஐ.ஏ.எஸ். கனவுடன் இருந்த அவரது வாழ்வில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பம், எத்தகைய மாற்றத்தை உருவாக்கியது. பொதுவாழ்வுக்கு முன்வருபவர்கள் எதிர்கொள்ளும் சிறைவாழ்வு எப்படிப்பட்டது என்பதை இரத்தமும் சதையுமாக எழுதியிருக்கிறார் அன்றைய மிசா சிவா, இன்றைய திருச்சி சிவா எம்.பி.
    மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர்

    1971ஆம் ஆண்டு தேர்தல் அரசியலில் களப் பணியாளராக அடியெடுத்து வைத்து — இன்று தி.மு.க. மாநிலங்களவைக் குழுத் தலைவராக பரிணமிக்கிறார். இந்த நூல் பற்றி அணிந்துரை எழுதிட எனக்குள்ள தகுதி நானும் ஒரு மிசா கைதி என்பது தான்! தோழர் சிவா அவர்கள் ஓராண்டுக் காலம் திருச்சி மத்திய சிறைச்சாலையில் கைதியாக இருந்த காலகட்டம் என்பது -அவர் வாழ்வைக் கூர் தீட்டிய கொல்லுப்பட்டறை என்பதை இந்நூலில் அவர் குறிப்பிடும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் குத்தீட்டியாக சிலிர்க்கிறது.
    கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்

    “எதிர்பாராத திருப்பம்” எனும் இந்நூல் நெருக்கடி காலத்தில் கழகமும் – கழகத் தோழர்களும் சந்தித்த சோதனைகளையும், வேதனைகளையும் இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து புரிந்து கொள்ளுகின்ற வகையில் எளிமையான நடையுடன் அமைந்துள்ளது. நெருக்கடி காலத்தில் மிசா சட்டம் அமல்படுத்தப்பட்டபோது. சிறையில் கழகத்தினர் பட்ட இன்னல்கள். சந்தித்த சோதனைகள், இடையூறுகள், கவலைகள் ஒவ்வொன்றையும் இந்நூலில் எடுத்துரைக்கின்ற விதம், நெருக்கடி காலத்தில் சிறையில் இருந்த எங்களைப் போன்றவர்களுக்கு, ‘மலரும் நினைவுகளாய் இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
    ஆர். எஸ். பாரதி அமைப்புச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்

    The post எதிர்பாராத திருப்பம்! first appeared on New Century Book House.

    ]]>
    முரசொலியின் மடியில் தவழ்ந்தவை https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b4%e0%af%8d/ Wed, 23 Oct 2024 09:55:18 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29513
  • Book Title : முரசொலியின் மடியில் தவழ்ந்தவை  (Murasoliyin madiyil thavazhnthavai)
  • Edition : 1
  • Category : Essay
  • ISBN : 9788198050274
  • Author : Tiruchi Siva M.P.
  • Weight : 300gm
  • Binding : Hard Bound
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 224
  • Code no : A5187
  • The post முரசொலியின் மடியில் தவழ்ந்தவை first appeared on New Century Book House.

    ]]>
    முரசொலியின் மடியில் தவழ்ந்தவை

    சகோதரர் சிவாவின் பேச்சாற்றல், அவரது சிந்தனைத் தெளிவின் வெளிப்பாடு.
    இவை அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அவரது எழுத்தாற்றல், படிக்கும்போது வியக்க வைக்கிறது! 1980 – 90களில் அவர் எழுதிய கட்டுரைகளை இன்று படிக்கத் தொடங்கினால் பிரமிப்பை உருவாக்கும் நடை! இடையிலே தடைபட்டுள்ள அவரது எழுத்து தொடரட்டும்! அன்று முரசொலியின் மடியில் தவழ்ந்தவை இன்று கழகம் காக்க முரசொலியின் கையில் பளிச்சிடும் போர்வாளாக மாறட்டும்!
    முரசொலி செல்வம்

    அண்ணன் திருச்சி சிவா அவர்கள் ‘முரசொலி நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். முத்தமிழறிஞர் கலைஞரால் தமிழினத்தின் முகவரியாகத் தொடங்கப்பட்டதுதான் ‘முரசொலி’, அப்படிப்பட்ட பெருமைவாய்ந்த “முரசொலி’யில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் காலத்தின் கல்வெட்டுகளாக விளங்குகின்றன. அண்ணன் திருச்சி சிவா அவர்களின் இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாகப் படிக்கும்போது நம் கழக வரலாற்று நிகழ்வுகளையும் கால வரிசையில் தெரிந்துகொள்கிறோம். ஏனெனில், இவை வெறும் கட்டுரைகள் அல்ல; வரலாற்று ஆவணங்கள்!
    மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு துணை முதலமைச்சர்

    திருச்சி சிவா அவர்கள் வடித்துத் தந்துள்ள ‘முரசொலியின் மடியில் தவழ்ந்தவை என்ற இந்நூல். முரசொலிப் பூங்காவில் பூத்த வாடாத வாச மலர்களாய் மணம் வீசுகின்றன. சிறந்த சொற்பொழிவாளரான சகோதரர் திருச்சி சிவா, எழுத்துத் துறையிலும் முத்திரை பதித்து இமயமாய் உயர்ந்து நிற்பது கண்டு பெருமிதம் கொள்கிறேன்.
    வைகோ எம்.பி. பொதுச்செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.

    அண்ணன் திரு. திருச்சி சிவா அவர்கள் ஒரு சிந்தனையாளர். அதனால் அவர் பேச்சாளர். பேசுவதை எழுத்தாக வடிக்கும் வல்லமை கொண்ட எழுத்தாளர். அரசியல் மட்டுமின்றி வரலாற்றில், சமூகவியலில் பரந்துபட்ட அறிவைப் பெற்ற ஆய்வாளர். அவர் முறசொலியில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து மொத்தமாக ஒரு புத்தகமாக வழங்கி அதனை நான் படிக்க நேர்ந்தபோது அவரை நான் இன்னும் பிரமித்துப் பார்க்கிறேன். மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இந்நூல் வாராது வந்த மாமணி.
    ஆ.இராசா எம்.பி. துணைப் பொதுச்செயலாளர். திராவிட முன்னேற்றக் கழகம்.

    The post முரசொலியின் மடியில் தவழ்ந்தவை first appeared on New Century Book House.

    ]]>
    மேடையெனும் வசீகரம் https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9a%e0%af%80%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/ Wed, 23 Oct 2024 09:55:18 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29514
  • Book Title : மேடையெனும் வசீகரம் (Medaiyenum vaseegaram)
  • Edition : 1
  • Category : Speech
  • ISBN : 9788198050267
  • Author : Tiruchi Siva M.P.
  • Weight : 300gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 392
  • Code no : A5186
  • The post மேடையெனும் வசீகரம் first appeared on New Century Book House.

    ]]>
    மேடையெனும் வசீகரம்

    திருச்சி சிவா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உலவிவரும் ஓர் அறிவுஜீவி! தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசக்கூடிய பேராற்றல் படைத்தவர்! பாராளுமன்றத்தில் அவர் ஆங்கிலத்தில் உரையாற்றும்போது அந்த
    மண்டபத்தில் உள்ள அத்தனை பேருடைய கண்ணும் – காதும் அவர் மீதே மொய்த்திருக்குமாம்! திருநங்கைகளின் உரிமைக்காக இவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை ஒரு மைல்கல்! “மேடையெனும் ‘வசீகரம்’ என்ற புத்தகத்தில், தலைவர்கள், அரசியல். சமூகம் மற்றும் இலக்கியம் ஆகிய தலைப்புகளில் மூழாங்கிய பேச்சுக்களை தொகுத்திருக்கிறார்! இந்தப் புத்தகம், களப்பணி ஆற்றும் இளைஞர்களுக்கும் நாளைய சந்ததியினருக்கும் பயன் பெறக்கூடிய வகையில் அமையும் என்பதில் சந்தேகமில்லை! அவர் மேடைதோறும் ஆற்றிய உரையின் தொகுப்பு தஞ்சாவூர் கதம்பம் போல் மிக அழகாக இருக்கிறது!
    துரைமுருகன் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்.

    திருச்சி சிவாவின் “மேடையெனும் வசீகரம்” என்கிற இந்தத் தொகுப்பு வெறும் சொற்பொழிவுத் தொகுப்பு அல்ல; கருத்துக் கருவூலங்கள். பல்வேறு தருணங்களில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் பெரும்பாலும் இலக்கியத் தன்மை கொண்டவை: ஆழ்ந்த பொருள் பொதிந்தவை. மேடைகளில் மடைதிறந்த வெள்ளமாய் அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்புகள் வெறும் ஒலியோடு இருப்பின் காலத்தில் கரைந்துபோய்விடும். கல்வெட்டாகத் திகழும் வண்ணம் நூல் வடிவில் வெளியிடும் அவரின் முயற்சி பாராட்டிற்குரியது. அவர் பரந்த படிப்பாளி என்பதற்கும், சிறந்த இலக்கியவாதி என்பதற்கும் தொகுப்பெங்கும் பளிச்சிடும் உரை மின்லைகளே சாட்சி.
    கவிப்பேரரசு வைரமுத்து

    இதில் பெரியார், தீப்பு சுல்தான். வாலி. கி.ராஜநாராயணன் ஆகியோரைப் பற்றிய உரைகள் இருக்கின்றன. இவற்றை ஒருவரே பேசி வெற்றி பெறமுடியும் என்பதுதான் சிவாவின் சிறப்பு. பெரியாரைப் பேசுபவர்களால் வாலியைத் தொட முடியாது. கி.ரா.வைப் பேசுபவர்களால் அம்பேத்கரைத் தொட முடியாது. ஆனால் அரசியல், இலக்கியம், வரலாறு, சினிமா, தன்னம்பிக்கை, வாழ்க்கை, குடும்பம் என எல்லாவற்றையும் எல்லா மேடைகளிலும் பேச எல்லாராலும் முடியாது. திருச்சி சிவாவால் முடியும் என்பதற்கு எத்தனையோ மேடைகள் காட்சியகம். அதற்கு இந்தப் புத்தகம். சாட்சியம்.
    பா. திருமாவேமன் தலைமை செய்தி ஆசிரியர், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி.

    திருச்சி சிவா அவர்களின் மேடைப்பேச்சின் பிரமிக்க வைக்கும் அம்சம் அவரின் சொல் தேர்வு, பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் தன்மை இன்மை அறிந்து சொற்களைத் தேர்ந்தெடுக்கும் வல்லவர் அவர். அவரின் பேச்சில் மின்னிய எத்தனையோ வைரங்களின் தொகுப்பு இந்த நூல். அவரின் ஞாபக அடுக்குகளின் பெட்டகம். இந்த மேடைத் தென்றல் என்றென்றும் வீசட்டும். இன்னும் உயர உயரப் பறக்கட்டும்! வருங்காலப் பேச்சாளர்களுக்கு வழிகாட்டியாகத் திகழட்டும்!
    பேரா. பாரதி பாஸ்கர் பட்டிமன்ற சொற்பொழிவாளர்.

    The post மேடையெனும் வசீகரம் first appeared on New Century Book House.

    ]]>
    கேளுங்கள்! சொல்கிறேன்… https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/ Wed, 23 Oct 2024 09:55:18 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29515
  • Book Title : கேளுங்கள்! சொல்கிறேன்...   (Kelungal! solgiren...)
  • Edition : 1
  • Category : Interview
  • ISBN : 9788198050229
  • Author : Tiruchi Siva M.P.
  • Weight : 300gm
  • Binding : Hard Bound
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 166
  • Code no : A5185
  • The post கேளுங்கள்! சொல்கிறேன்… first appeared on New Century Book House.

    ]]>
    கேளுங்கள்! சொல்கிறேன்…

    திமுக இளைஞரணி உருவாகிய போது திருச்சி மாநாட்டில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட போது, அதில் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தவர். திராவிட இயக்கக் கருத்துகளை, தாய்மொழி பற்றிய உணர்வுகளை எடுத்துச் சொல்வதில் தனி ஆர்வம் கொண்டவர். இந்நூல் முழுவதும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசியல் ரீதியாகவும் இலக்கிய நயத்தோடும், பொருத்தமாகவும். நேர்மையாகவும். உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து பதில் சொல்லியிருக்கிறார் திருச்சி சிவா அவர்கள். அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமல்ல. இன்றைய இளைய தலைமுறை மட்டுமல்லாது அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.
    ஆர்.நல்லகண்ணு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.

    தி.மு.கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக, நான்காவது முறை நாடாளுமன்ற உறுப்பினராக. நாடறிந்த பேச்சாளராக. கண்ணியமிக்க அரசியல்வாதியாக இன்று வளர்ந்து நிற்கும் திருச்சி சிவா, கடந்து வந்த பாதையை மட்டுமின்றி, நடந்து கொண்டிருக்கும் நாள்களின் அரசியலையும் சேர்த்து இந்தப் புத்தகத்தின் நேர்காணல்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன! இந்த நேர்காணல்களைப் படிக்கும்போது. அவருடைய விரிந்து பரந்த அறிவு. நாடாளுமன்றத்தில் அவர் கொண்டுவந்து குறிப்பிடத்தக்க சில தனி நபர் தீர்மானங்கள் பலவற்றையும் உள்வாங்கிக்கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது! அப்படிப்பட்ட ஒருவரின் நூலுக்கு அணிந்துரை எழுதும் வாய்ப்பை பெற்றதில் நான் பெருமிதம் கொள்கிறேன்!
    சுப.வீரபாண்டியன் தலைவர். திராவிட இயக்கத் தமிழர் பேரவை.

    இது கைக்கடக்கமான நூல். விறுவிறுவெனப் படித்து, பக்கங்கள் தீர்ந்துபோனதும் திருச்சி சிவா அவர்களுடன் நேரில் பேசிய ஒரு நிறைவு கிடைத்துவிடுகிறது. அவரிடம் இன்னும் என்னென்னவோ கேட்க வேண்டும்போல் தோன்றுகிறது. இதுதான் இந்த நூலின் வெற்றி. ஒரு முக்கியமான தமிழ்நாட்டு அரசியல்வாதியின் சமூகம் சார்ந்த கருத்துகளை அறிய. கட்சி பேதமின்றி எல்லோரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.
    கோ.திலகவதி ஐ.பி.எஸ் மேனாள் காவல்துறை இயக்குநர், தமிழ்நாடு.

    The post கேளுங்கள்! சொல்கிறேன்… first appeared on New Century Book House.

    ]]>