kaniyanbalan – New Century Book House https://ncbhpublisher.in Wed, 23 Oct 2024 09:54:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png kaniyanbalan – New Century Book House https://ncbhpublisher.in 32 32 தொல்பழங்காலமும் தமிழக நகர அரசுகளும் https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%95/ Wed, 23 Oct 2024 09:54:21 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29317
  • Book Title : தொல்பழங்காலமும் தமிழக நகர அரசுகளும்  (Tholpazhnkalamum thamizaga nagara arasukalum)
  • Edition : 1
  • Category : History
  • ISBN : 9788197749681
  • Author : K.N. Balan Kaniyanbalan
  • Weight : 300gm
  • Language : Tamil
  • Binding : Hard Bound
  • Publishing Year : 2024
  • Pages : 236
  • Code no :A5121
]]>
தொல்பழங்காலமும் தமிழக நகர அரசுகளும்

தொல்லினக்குழு நிலையில் இருந்து நாகரிக நிலையை அடையும் காலகட்டம் வரையான மனித இனத்தின் வளர்ச்சி குறித்தப் புரிதலை உருவாக்கும் கண்ணோட்டத்தில்தான் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தொல்லினக்குழு காலத்தில் இருந்த கண ஆட்சி முறையில்தான் உண்மையான சுதந்திரம். சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன இருக்கும். கண ஆட்சிமுறை என்பது ஆண்-பெண் வேறுபாடு இன்றி அனைவரும் அனைத்திலும் சமமாக இருந்த ஒரு காலகட்டம். சொத்துடைமை தோன்றிய பின் கண ஆட்சிமுறை அழிந்து, அவ்விடத்தில் நாகரிகத்தின் அடையாளமான நகர அரசு தோன்றுகிறது. முதலில் உலகம் முழுவதும் நகரஅரசுகள்தான் தோன்றுகின்றன. கிரேக்க உரோம தொல்லினக் குழுக்கள். தொல்லினக்குழு நிலையில் இருந்து, நகர அரசுகளாக உருவானது குறித்த வரலாற்று நிகழ்வுகள் இங்கு பேசப்பட்டுள்ளன.
பழந்தமிழகத்திலும் முதலில் நகர அரசுகளே தோன்றின. பழந்தமிழகத்தின் சங்ககாலம் (கி.மு. 750 கி.மு. 50) என்பது நகர அரசுகள் நிலைபெற்று இருந்த காலகட்டம். நகர அரசுகள் என்பன பேரரசுகளைவிட பலவகையிலும் உயர்வளர்ச்சி பெற்றனவாக இருந்துள்ளன என்பதை வரலாறு உறுதி செய்துள்ளது. பழந்தமிழக நகர அரசுகளும், மகதப்பேரரசை விட பல்வேறு துறைகளிலும் ஒரு உயர் வளர்ச்சி பெற்றனவாக இருந்தன என இந்நூல் உறுதி செய்கிறது. .தமிழக நகர அரசுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்த பொருள்முதல்வாத மெய்யியலான எண்ணியத்தைத் தோற்றுவித்த தொல்கபிலர் குறித்தும் இந்நூல் பேசுகிறது.
சேரன் செங்குட்டுவன். மாமூலனார் ஆகியவர்களின் காலமும் சங்ககால கட்டங்களின் காலமும் இங்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கி.மு. 350 முதல் கி.மு. 50 வரையான சாங்ககாலகட்ட வேந்தர்கள் குறித்த, மிகச் சுருக்கமான வரலாறும் இந்நூலில் தரப்பட்டுள்ளது. இக்காலகட்ட வட இந்திய. தக்காண அரசுகள் குறித்தும் இந்நூல் பேசுகிறது. சங்ககாலம் சார்ந்த பல்வேறு தரவுகள் இந்நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக தொல்லினக்குழுக்கள் குறித்தும், தொல்லினக் குழுக்கள் நகர அரசுகளாக உருவாவது குறித்தும். பழந்தமிழக நகர அரசுகள் குறித்துமான ஒரு கழுகுப்பார்வையை இந்நூல் வழங்குகிறது.

]]>
பழந்தமிழர் வணிகம் https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/ Wed, 23 Oct 2024 09:53:56 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29242
  • Book Title : பழந்தமிழர் வணிகம்  (Pazhanthamizhar Vanigam)
  • Edition : 1
  • Category : History
  • ISBN : 9788197749612
  • Author : K.N.Balan Kaniyanbalan
  • Weight : 300.00gm
  • Binding : Hard Bound
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 276
  • Code no : A5128
  • ]]>
    பழந்தமிழர் வணிகம்

    கி.மு. 1000க்கு முன்பிருந்து பழந்தமிழகத்தில் நகர அரசுகள் இருந்து வந்துள்ளன. கி.மு. 750 முதல் கி.மு, 50 வரையான சங்ககாலத்தில் அவை வளர்ச்சி பெற்ற நகர அரசுகளாக உருவாகியிருந்தன. உலக வரலாற்றில் பேரரசுகளைவிட நகர அரசுகள் சிறந்தனவாக இருந்துள்ளன என்பதை. கார்டன் சைல்டு (V.Gordon Chide) போன்ற தொல்லியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். அதனை உறுதி செய்யும்வகையில் வட இந்தியாவின் மகதப் பேரரசைவிட தமிழக நகர அரசுகள் மிகச்சிறந்தனவாக, வளர்ச்சி பெற்றனவாக இருந்தன.
    பழந்தமிழ்நாட்டில் இருந்த அளவு கல்வியறிவும், எழுத்தறிவும், அறிவியல் தொழில் நுட்பமும், உற்பத்தித்திறனும், வணிகமும் மகதப்பேரரசில் இருக்கவில்லை. உலக அளவில் நடந்த பண்டைய இந்திய வணிகம் என்பது பெருமளவு பழந்தமிழ்நாடு வழியேதான் நடந்தது என்பதை இந்நூல் உறுதி செய்துள்ளது. இவ்வளர்ச்சிகளால் தான் கி.மு. 3ம் நுற்றாண்டின் தொடக்கத்தில் பழந்தமிழக அரசுகளின் ஐக்கியக் கூட்டணி. மௌரியப் பேரரசின் பெரும்படையைத் தோற்கடிக்க முடிந்தது.
    பழந்தமிழகத்தின் உலகளாவிய வணிக வளர்ச்சி, உள்நாட்டு வணிக வளர்ச்சி ஆகியன குறித்தப் பல்வேறு தரவுகளை இந்நூல் விரிவாகப் பேசுகிறது. பழந்தமிழகத்தின் உலகளாவிய வணிகத்திற்கு மிக முக்கியக் காரணியாக இருந்த தொழில்நுட்ப மேன்மை குறித்தும், நாணயங்கள் குறித்தும் இந்நூல் பேசுகிறது. அன்றைய முக்கியத் துறைமுகங்கள், வணிக நகரங்கள், ஏற்றுமதி, இறக்குமதி முதலியன குறித்தும், அங்கு நடைபெற்ற பல்வேறு தொழில்கள். வணிகம். முதலியன குறித்தும் இங்கு சொல்லப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் நடைபெற்ற அகழாய்வுகளில் கிடைத்த வணிகத்தரவுகள், சாங்க இலக்கியத்தில் பேசப்பட்டுள்ள வணிகம் குறித்தான தரவுகள் ஆகியன குறித்தும் இந்நூல் பேசுகிறது…
    பழந்தமிழ்நாட்டின் கடல்வணிகம் குறித்த வெளிநாட்டு அறிஞர்களின் பல்வேறு குறிப்புகளும் விளக்கங்களும் இந்நூலில் பேசப்பட்டுள்ளன..பழந்தமிழ் நாட்டின் உலகளாவிய வணிகவளர்ச்சிக்குப் பேருதவியாக இருந்த வானியல் குறித்தும், மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபு குறித்தும் இந்நூல் எடுத்துரைத்துள்ளது.
    இறுதியாக, பழந்தமிழ்ச்சமூகம் பல்வேறு துறைகளிலும் பேரளவான வளர்ச்சியைப் பெற்று. தனது உலகளாவிய வணிகத்தைக்கொண்டு. பெரும்பொருள்வளமும் செல்வவளமும் கொண்ட நாடாக இருந்தது என்பதோடு உலகின் ஒரு முன்னணிச் சமூகமாகவும் இருந்தது என்பதை இந்நூல் பலவகையிலும் உறுதி செய்கிறது.

    ]]>
    தமிழ் மொழி https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/ Wed, 23 Oct 2024 09:53:55 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29239
  • Book Title : தமிழ் மொழி  (Thamizh Mozhi)
  • Edition : 1
  • Category : History
  • ISBN : 9788197749667
  • Author : K.N.Balan Kaniyanbalan
  • Weight : 400.00gm
  • Binding : Hard Bound
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 260
  • Code no : A5127
  • ]]>
    தமிழ் மொழி

    தமிழ் ஒரு தொன்மையான செவ்வியல் மொழி என்பதையும், பரவலான கல்வியறிவையும் எழுத்தறிவையும் வழங்குவதற்கான பழந்தமிழ்நாட்டு கல்விமுறை எப்படி இருந்தது என்பதையும் இந்நூல் எடுத்துரைக்கிறது. சங்ககால நூல்களின் காலமும் அழிவும் குறித்தும், ஆகமங்கள் குறித்தும் இந்நூல் பேசுகிறது. தமிழ் நூல்களின் வரலாற்றையும் (கி.மு.750-கி.பி.1800) சுருக்கமாகக் கூறுகிறது. சமற்கிருதம் தமிழோடு ஒப்பிடப்பட்டு தமிழுக்கு இணையான சிறப்பு சமற்கிருதத்துக்கு இல்லை என உறுதி செய்கிறது. தமிழ் ஓர் அறிவியல் மொழி என உறுதிசெய்யும் வகையில், தொல்கபிலர் தமிழ் அறிவுமரபின் தந்தை என்பது இங்கு விளக்கப்பட்டுள்ளது. தாய்மொழிக்கல்வி பற்றிய விரிவான ஆழமான விளக்கங்களும், தமிழ்மொழிவழிக்கல்வியின் சிறப்புகளும் இந்நூலில் பேசப்பட்டுள்ளன.
    ஆங்கிலம் ஓர் இன ஆதிக்க ஆணாதிக்க மொழி என்பது குறித்தும், ஆங்கில நாட்டிலேயே, ஆங்கிலமொழி பல நூறு ஆண்டுகளாக ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலைமை குறித்தும், வளர்ந்த நாடுகளில் அந்தந்த மொழிகளே ஆட்சிமொழி முதல் இறைமொழி வரை அனைத்துமாக இருப்பது குறித்தும் இந்நூல் பேசியுள்ளது. தமிழ் ஆட்சிமொழிச்சட்டம், தமிழ்வழிக்கல்வியின் இன்றையநிலை. தமிழ்மொழியே நமது அடையாளம், பண்டைய மொழிகள். எழுத்துக்கள் ஆகியன குறித்தும் இந்நூல் பேசுகிறது. பொதுவாக மொழி குறித்துப் பலவகையில் விளக்குவதோடு, பண்டைய தமிழ்மொழியின் சிறப்புகள், தமிழ் மொழியின் இன்றைய தேவை ஆகியன குறித்த ஒரு கண்ணோட்டத்தையும் இந்நூல் வழங்குகிறது எனலாம்.

    ]]>
    பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும் (I & II) / Pazhanthamizh Samuthayamum Varalaarum Book – (I & II) https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5/ Fri, 18 Oct 2024 22:26:14 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25829 சங்க இலக்கியங்கள் முழுவதையும் பயின்று பயின்று. பலமுறை பயின்று உள்ளத்து இருத்தினால்தான் இந்நூலை எழுதுவது சாத்தியமாகும்… இது செயற்கரிய செயல்… உண்மையிலேயே இமாலய முயற்சி. சங்ககால வேந்தர்களின் சரியான காலத்தை நிர்ணயம் செய்துள்ள இப்பெருநூல் அளவில் மட்டுமல்ல பொருள்பொதிந்த வரலாற்றிலும் மிகப்பெரிய நூல்
    – புலவர் செ. இராசு.
    பண்டைய தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாக இந்நூல் தரும் கால அட்டவணை நம்பகத்தன்மை மிக்கதாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. சிந்தனை மரபு சார்ந்த வரலாறு. இனமரபு சார்ந்த வரலாறு. சங்கநூல்களின் காலவரையறை ஆகிய பல்வேறுபட்ட பதிவுகள், தமிழகத் தொல்வளங்கள் குறித்து அறிவதற்குப் பெரிதும் துணைபுரிகிறது. கணியன்பாலன் அவர்களின் தேடல், அதற்கான அவரது உழைப்பு ஆகியவற்றைத் தமிழ்ச் சமூகம் கொண்டாட வேண்டும்.
    – வீ. அரசு, பேராசிரியர்.
    கணியன் பாலனின் பங்களிப்பு வெறும் ஊகங்களின் அடிப்படையில் அமைந்ததல்ல. அறிவியல் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட சீரிய ஆய்வு. இந்த நூல் எழுதப்பட்ட போது பயன்பட்ட சான்றுகளைக் கடந்து கீழடி அகழாய்வு இந்த ஆய்வின் பாதை மிகச் சரியானது என்று மெய்ப்பித்து விட்டது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை கால்டுவெல் வெளியிட்ட போது எப்படித் தமிழர் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்பட்டதோ அதுபோல, பாரதியாரின் பாஞ்சாலி சபதம் வெளிவந்த போது எப்படிக் கவிதை இலக்கியத்தில் ஒரு புதிய களம் தோன்றியதோ அது போல தமிழர் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை உருவாக்கும் நூல் இந்நூல், இந்நூலை வரலாறு என்று சொல்வதைவிட வரலாறு படைத்த வரலாறு என்று சொல்வதுதான் பொருத்தம்… இதுவரை இவ்வளவு விரிவாகத் தமிழர் வரலாறு ஆராயப்படவும் இல்லை. அசைக்க முடியாத சான்றாதாரங்களோடு பழமை நிவைநாட்டப் படவும் இல்லை.
    – சிற்பி பாலசுப்ரமணியம்.

    ]]>