New Century Book House
New Century Book HouseNew Century Book House
மாத்தளை சோமு 1௦௦ சிறுகதைகள் தொகுதி 1
0.0·0 reviews

மாத்தளை சோமு 1௦௦ சிறுகதைகள் தொகுதி 1

By Maththalai Somu

Printed Book

₹297

₹330

Description

'நாடற்றவர்கள் உருவான அவலத்தை, ஸ்ரீமாவோ -சாஸ்திரி ஒப்பந்தத்தின்கீழ் அந்த மக்கள் நாடுகடத்தப்பட்ட கொடூரத்தைக் கண்கொண்டு பார்த்தவர். தமிழகத்தில் தாயகம் திரும்பிய மலையகத் தமிழரின் இன்னல்களை. ஏக்கங்களை நெருங்கி நின்று பார்த்தவர். இலங்கையைக் கொளுத்திய 83 இன் கறுத்த ஜூலை கொடூரத்தை அனுபவித்தவர். தமிழகத்தின் வாழ்வியலை அந்த தேசத்தின் அங்கமாகவே நின்று தரிசித்தவர். அவுஸ்திரேலியக் கண்டத்தில் அவர் தரித்துநின்றபோது, புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் மக்களின் ஓர் கூறாகத் தன்னை அடையாளம் காண்கிறார். நாடுகள். தேசங்கள் என்ற எல்லைக்கோடுகளின் வெறுமையை அவதானிக்கிறார். மலையக எழுத்தாளர்களில் உலகெங்கும் பயணித்த தனித்த ஓர் எழுத்தாளராக மாத்தளை சோமு திகழ்கிறார்.மலையகம், தமிழகம், புலம்பெயர் வாழ்வு என மூன்று புலங்களில் ஊற்றெடுக்கும் இலக்கியமாக. திரிவேணி சங்கமமாக மாத்தளை சோமுவின் எழுத்துகள் தமிழ் இலக்கியத்தில் தனிச் சிறப்பிடம் பெறுகின்றன. அவரின் நூறு சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பு கொண்டாடப்படும் என்பதில் ஐயமில்லை...

மு.நத்தியானந்தன்

முன்னாள் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர், இலண்டன், பிரிட்டன்.

ஈழத்துச் சிறுகதை இலக்கியத்திற்கும் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தைப் போலவே ஒரு நூறாண்டுக்கால வரலாறு இருக்கிறது. எண்பதுகளுக்குப் பிறகு, ஈழத்தில் ஏற்பட்ட இனவாதம், போர் காரணமாக ஏராளமான ஈழத் தமிழர்கள் இருபதிற்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றனர். ஈழத்துப் போரும் புலம்பெயர் வாழ்வும் இவர்களது கதைகளின் பேசுபொருளாயின. மாத்தளை சோமுவின் இச்சிறுகதைத் தொகுப்பு மலையகம், இந்தியா, ஆஸ்திரேலியா போரும் போருக்குப் பிந்தைய ஈழம் எனும் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டுள்ளது. இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா என்கிற வெவ்வேறு தேசங்களில் வாழும் தமிழர்களின் வாழ்வியலை ஒரு புள்ளியில் இணைத்து ஒன்றுகலந்து தருகிறது. மனித வாழ்வின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் இக்கதைகள் மனிதத்தின் உயிர்ப்பையும், துளிர்ப்பையும். புத்துயிர்ப்பையும் முன்னிறுத்துகின்றன. இந்த நூறு சிறுகதைகளில் மாத்தளை சோமுவின் வாழ்க்கையனுபவமும் படைப்பனுபவமும் படைப்பாற்றலும் தொடர்ச்சியான மாற்றங்களையும் வளர்ச்சியையும் பெற்றுள்ளதோடு அவரை தமிழில் எழுதும் உலக எழுத்தாளராக்கியுள்ளது....

பேராசிரியர் பா.ஆனந்தகுமார்,

தலைவர், தமிழ்த் துறை,

காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்.

Book Details

Language
தமிழ்
Format
pdf
Published
2025