New Century Book House
New Century Book HouseNew Century Book House
பஞ்சமி நிலப் போர்
0.0·0 reviews

பஞ்சமி நிலப் போர்

By Mark

Printed Book

₹90

₹100

Description

"ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நில விற்பனை செய்யும் பொழுது அந்த நிலத்தில் வேலை செய்த பறையனையும் சேர்ந்து விற்கும் முறை முன்பு இருந்தது. இந்த முறை இன்னும் செங்கல்பட்டில் நீடிக்கிறது.... மிகக் குறைந்த அருவருக்கத்தக்க உணவில் பறையன் திருப்தியடைகிறான். அவனுக்கும், அவன் மனைவிக்கும் உடையென்று மிகச் சிறிதே உள்ளது. அவன் வாழும் குழசையானது மிகவும் மோசமானதாகவும். பலர் கூட்டமாக அதில் வாழும் சூழ்நிலையிலும் இருக்கிறது. மிகவும் கொடுரமான நிலையில் தான் நடத்தப்படுவதை எதிர்க்க வேண்டும் என்ற நினைப்பு கூட இல்லாமல் இருக்கிறான். கிராமத்தில் மிகவும் அருவருக்கத்தக்க வேலையை இவன் விருப்பமுடன் செய்கிறான். இவன் கஷ்டப்பட்டு, வேலை செய்பவனாகவும், பொறுமையுள்ளவனாகவும், விசுவாசமுள்ளவனாகவும் இருக்கிறான். இத்தகைய மன நிலை உள்ளவர்களிடம் இப்பொழுது உள்ள நிலையைப் பற்றி ஓர் அதிருப்தி உணர்வை ஏற்படுத்துவது எப்படி என்பதும், உயர்ந்த ஆசைகளால் இவர்களை நிறைப்பது எப்படி என்பதும்தான் இப்போதைய கேள்வி." THE HINDU-3rd June 1891. "பறையன் ஒருவன் அனுமதியில்லாமலும், அதே சமயம் எந்தவிதமான இடையூறும் இல்லாமலும் ஒன்பது வருடங்கள் பயிரிடுகிறான். நிலவரியைத் தவறாது செலுத்தியதற்கான ரசீதுகளையும் அவன் வைத்திருக்கிறான். அவன் துணிவுடன் பட்டாவிற்கு விண்ணப்பிக்கிறான். மிராசுதார் அவனது விண்ணப்பத்தை எதிர்க்கிறார். அதனால் மீராசுதாருக்கு அந்த நிலம் கிடைக்கிறது. பிறகு பறையனிடம் அந்த நிலத்தைக் கொடுக்கிறார். ஆறு வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் பட்டாவுக்கு விண்ணப்பிக்க பறையன் முயல்கிறான். இம்முறை பக்கத்து கிராமத்து மிராசுதார் இதை எதிர்க்கிறார். ஆனால் அப்பருக்கு இதை எதிர்க்க உரிமையில்லை. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்பொழுது அறுவடைக்குத் தயாராகவுள்ள பறையனுடைய நிலத்தில் மிராசுதாரின் கால்நடைகள் விரட்டப்படுகின்றன. காற்றடைகள் பயிர்களை மிதித்தும், தின்றும் நாசம் செய்கின்றன. நீதிமன்றத்தில் மிக நீண்ட காலத்திற்கு வழக்கு நடக்கின்றது. பயிர்கள் நாசமாக்கப்பட்டதற்கான இழப்பீட்டை பறையன் பெறுகிறான். ஆனால் மிராசுதாருக்குப் பட்டா கிடைக்கிறது. பதினைந்து வருடங்கள் பயன்படுத்திய நிலத்திலிருந்து பறையன் தூக்கி எறியப்படுகிறான். பறையனுக்கு போரிடும் அளவிற்கு புத்திக்கூர்மையோ, அல்லது பண்பலமோ இல்லை. நிதியை அடைவது என்பது அவனால் முடியாது"

THE HINDU - 1st October 1891.

Contributors

Book Details

Language
தமிழ்
Format
pdf
Published
2024

Reviews And Ratings

0 Reviews
0.0

Based on 0 Reviews

5
0
4
0
3
0
2
0
1
0