மனக்குகை ஓவியங்கள்! / Manakkugai Oviyangal!
By Subrabharathimanian
₹50
Description
சாகித்ய அகாதமியின் ஆலோசனைக் குழு உறுப்பினரான சுப்ரபாரதிமணியன் திருப்பூரைச் சார்ந்தவர். இவர் 'கனவு' என்னும் இலக்கிய இதழினை 23 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். 7 நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 33 படைப்பு நூல்களை வெளியிட்டிருக்கும் இவரின் நூல்கள் பல பல்கலைக்கழகங்களில் பாடங்களாக இடம்பெற்றுள்ளன. இவர் எழுதிய "ஓடும் நதி என்.சி.பி.எச். - கலை இலக்கிய பெருமன்ற சிறந்த நாவலுக்காகப் பரிசு பெற்றது. "சாயத்திரை” நாவல் ஆங்கிலம், இந்தி, மலையாளம். கன்னடம் மொழிகளில் வெளிவந்துள்ளது. பிணங்களின் முகங்கள். தேநீர் இடைவேளை ஆகிய நாவல்கள் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளன.
சுப்ரபாரதிமணியன் எழுதியுள்ள **மனக்குகை ஓவியங்கள் **என்னும் இந்நூல் பாரதியார். புதுமைப்பித்தன். சுந்தரராமசாமி, சுஜாதா. தோப்பில் முகமது மீரான் உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட தமிழ் இலக்கிய ஆளுமைகளின் எழுத்துப் பாங்குகளை அலசியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்.
இத்தகைய மூத்தோர்களின் எழுத்துகளை அன்றி, இலக்கியத் திருப்பூர் கிருஷ்ணன் கையாண்டுள்ள வாழ்வியல் நெறி, சி.ஆர்.ரவீந்திரனின் கதைக்களம் எனப் பல்வேறு இலக்கிய இயல்புகளைக் கூர்ந்து நோக்கி. இந்நூலில் பதிவு செய்துள்ளார். சுப்ரபாரதிமணியன்.
Contributors
Book Details
- Language
- தமிழ்
- Format
- Published
- 2024
Reviews And Ratings
0 ReviewsBased on 0 Reviews
More from this Author
Subrabharathimanian
Similar Books
Marxism
