Search

தமிழகத்தின் மக்தூம் : பொ.கைலாசமூர்த்தி/ Thamizhakathin Makthum Po.KailasaMoorthy

185.00

ISBN : 9788123441238
Author : Ganathy Subramaniyam
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A4476

Qty
Compare

In Stock

இறுதிவரை மக்கள் கலைக்காகவும் கலைஞர்களுக்காகவும் ஓடிய தோழர் கைலாசமூர்த்தியின் வாழ்க்கை, ‘வரலாறே’ ஆகும்.
அவரது வாழ்க்கைச் சாதனைகளை அவருடன் பழகிய தோழர்கள் பலரிடமிருந்து கட்டுரைகளாகப் பெற்று நூலாக்கும் முயற்சியில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன், முனைவர் நா. இராமச்சந்திரன், முனைவர் ரகு அந்தோணி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இது கலை இலக்கிய ஆர்வலர்களுக்கு ஆவணமாகப் பயன்படும்.
இரா.நல்லகண்ணு மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
தோழர் கைலாசமூர்த்தி நம்மிடம் இல்லை. அவரது இலட்சியக் கனவுகள் நிறைவேறும். நிச்சயமாக, உறுதியாக நிறைவேற பாடுபடுவோம். எமது நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்து நிற்பார் கைலாசமூர்த்தி. அவரது பண்புகள் நம்மைப் பக்குவப்படுத்தும். பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய கலைஞன் என்றென்றும் நம்முடன் வாழும் கலைஞன்.
இந்நூலில் மதிக்கத்தக்க அறிஞர் பெருமக்கள், கைலாசமூர்த்தியுடன் நன்கு பழகி அவரை நன்கறிந்த சான்றோர்கள், உளப்பூர்வமாகத் தங்களது படைப்புகளை வழங்கியுள்ளனர். அவர்கள் அளித்த புகழ்மிக்க பூ மலர்களை மாலையாகத் தொடுத்து நூல் வெளிவருவது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.

இரா.முத்தரசன் தமிழ் மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

Back to Top